16 ஜனவரி 2016

நாள் தோறும் தேடுகின்றேன்

                                        

தேவதைகள் வாழ்க்கையென்றும் 
தேனாக இனிப்பதில்லை. 
தினம் தோறும் தொடர்‍ந்து வரும் 
கவலைகளும் அழிவதில்லை 

விடையறியா தேடுதல்கள் 
வலிபோக்கும் மருந்தானதில்லை 
சோர்ந்து போன உள்ளமதில் 
சுமையென்றும் அகல்வதில்லை.

அனைத்தையும் நேசிக்கிறேன்
அன்பை மட்டும் யாசிக்கிறேன்
வலியில்லாத வாழ்வு ஒன்றை 
நாள் தோறும் தேடுகின்றேன் 


18 கருத்துகள்:

  1. நிரந்தரங்கள்
    ஏதுமில்லை.
    தேவதைகள்
    அவர்களுக்காய்
    வாழ்வதில்லை..
    வந்த
    பிறவி இது
    வாய்ப்பதெல்லாம்
    இறையின் வரம்.

    நேசிப்பை
    யாசிக்காதீர்கள்..
    யோசிக்காமல்
    ஒன்று செய்வீர்..

    இனி
    இதுபோல்
    எழுதாதீர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி முதல் கருத்திடலுக்கு, நேசிப்பை யாதித்தாலும் மறுதலிக்க்கும் இவ்வுலகில் யாசிப்புக்கு பயனுண்டா?

      யோசிக்கின்றேன் சாரே!

      நீக்கு
  2. நல்ல ஒரு கவிதையும், ரசிக்கும்படி முதல் பின்னூட்டமும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நானும் ரசித்தேன். நன்றி சார்.

      நீக்கு
  3. தேவதைகளுக்கும் துன்பங்கள் உள்ளதா? இருந்தாலும் அதுவொன்றும் சீரியசானதாக இருக்காது.
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் இருக்குத்தான் செய்யும், இல்லாமல் எங்கே போகுமாம்.

      நன்றிப்பா!

      நீக்கு
  4. அனைத்திற்கும் ஒரு நல்ல மாற்றம் வரும்...

    பதிலளிநீக்கு
  5. "அன்பை வாங்கிட எவருமில்லை" என முடியும் கவிஞர் வாலியின் பாடல் நினைவுக்கு வருகிறது. தன்னிரக்கம் தேவதைகளுக்கானதல்ல...
    நெஞ்சே எழு!

    பதிலளிநீக்கு
  6. அனைத்தையும் நேசிக்கிறேன்
    அன்பை மட்டும் யாசிக்கிறேன்//

    கவிதை அருமை!!! சகோதரி அன்பை எதற்கு யாசிக்க வேண்டும்...நேசிக்கும் போது தன்னலமற்ற அன்பைக் கொடுக்கும் போது அன்பு தானே தேடி வந்துவிடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் ஆகுமலப்பா!ஆகட்டும். நன்றிப்பா.

      நீக்கு
  7. கடந்த பதிவின் தாக்கம் இந்தக் கவிதையில் தெரிகின்றது இனியெனும் வசந்தமே... வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ இது எழுதி பல வருடமாச்சே! ஆனால் செம பொருத்தம் தான் சார். நன்றி சார்.

      நீக்கு
  8. இருள் ஒன்று இல்லையெனில் பகலுக்கு மதிப்பில்லை!
    குளிரொன்று இருப்பதாலேயே வெப்பம் ஈர்க்கப் படுகின்றது!
    பள்ளங்கள் இல்லையேன்றால் மேடு ஏது?
    கள்ளர்கள் இருப்பதாலேயே காவலுக்கு காவலர்கள்!
    உள்ளங்கள் நோகையிலே உறுதுணையாக வந்திடுமே நட்புக்களும் சொந்தங்களும்!
    தோல்வியும் வெற்றியும், இனிப்பும் கசப்பும், துன்பமும் இன்பமும் எல்லாமும் கலந்துதான் வாழ்க்கை!
    அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. அனைத்தையும் நேசிக்கிறேன்
    அன்பை மட்டும் யாசிக்கிறேன்
    வலியில்லாத வாழ்வு ஒன்றை
    நாள் தோறும் தேடுகின்றேன்

    மாறுதல் வரும் அக்கா....
    வலிகளை மறந்திடுங்கள்...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!