08 செப்டம்பர் 2019

நூலகம் அமைக்கும் பணிக்கான உதவிக்கோரிக்கை.

எமது எதிர்கால சமூகத்தினை கட்டமைத்திடும் நீண்ட கால திட்டமிடலோடு....!
கடந்த வருடம்  நான் இட்ட பதிவில்  நூல்களை தந்து உதவுவதாக கூறிய  நட்புக்களே... !
கலாச்சாரம், சமூகச் சீர் திருத்தம், சமூக மேம்பாட்டுக்கான கருத்தியல்களை பயிற்றுவித்து உடன் பயணித்திட...!
அடுத்த புத்தாண்டிலிருந்து சமூக முன்னேற்றத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுடனும் ஊர்ப்பெரியவர்களின் ஒத்துழைப்போடு,மாதிரி மீட்சித்திட்டமொன்றை முன்னெடுக்கும் பணியில்....
நூலகத்துக்கு தேவையான நூல்களை அடுத்து வரும் இரு மாதங்களுக்குள் சேகரித்து தரக்கூடிய ஆர்வமுள்ளவர்கள் இணையுங்கள்.
கட்டாயம் தேவையான நூல்கள்
1.சிறுவர் இலக்கியங்கள்.
2. பாலர், சிறுவர் பாடல்கள் / தமிழ் ஆங்கிலம் சிங்களம்
3. பாலர், சிறுவர் கதைகள் / தமிழ் ஆங்கிலம் சிங்களம்
4.சரித்திர,வரலாற்று நூல்கள்
5.பாடசம்பந்தமான புத்தகங்கள்.
6.நாவல்கள்
7.சங்ககால இலக்கியங்கள்
8. விஞ்ஞான, சமூகவியல் நூல்கள்,
9.தொழில் நுட்பம் சார்ந்த நூல்கள்
10. சுய சரிதைகள் கவிதைகள் கட்டுரைகள் அனைத்தையும் கொண்ட நூலகம் அமைத்திடும் பணியில் இணையுங்கள் நண்பர்களே..!

எம்மால் முன்னெடுக்கபட இருக்கும் திட்டங்கள் 
01. Kinder Garden
02. Library,
03. Free Classes,
04 Free Exam Practice,
05. Motivation & Counseling Classes
06. Sports Activities
07. Youth Development Programs
08. Cultural Activities
09. Study & Reading Corner, Etc

தமிழ் நாட்டிலிருந்து நூல்களை சேகரித்து தர கூடியவர்கள். விபரம் தந்தாலும் நான் அனைத்தையும் ஒருங்கிணைத்து இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்வேன்.
தேவைகள் அனேகமுண்டெனினும் நூல்களுக்காக மட்டுமே இங்கே கோரிக்கை விட்டிருக்கின்றேன்.
திட்டமிட்ட காரியங்கள் பூர்த்தியான பின் இடம், காலம் அனைத்தும் பகிரப்படும்.

அது வரை... !
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

என்றுணர்ந்தே கரம் இணையுங்கள்...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!