15 டிசம்பர் 2018

உலகத்தின் நீர்த்தேவைகள்

எதிர்காலத்தில்  மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாக உலகின் வெப்பமாதலும், தீவிரவாதமும் இருக்கின்றது. 

பூமி வெப்பமயமாகுதல் என்பது  பூமியில்  சுற்றுப்புiறம் மற்றூம் கடற்பகுதியில் ஏற்பட்டிருக்கும் வெப்ப நிலை உயர்வைக்கொண்டே கணக்கிடப்படுகின்றது. அவ்வகையில்  பல காரணங்களால் நாம் வாழும் பூமியானது நாளுக்கு நாள் வெப்பமாகிக்கொண்டே செல்கின்றது.

ஒரு பக்கம் அதிக வெப்பமயமாவதனால் ஆட்டிக், அண்டாட்டிக் பிரதேச பனிப்பிரதேசங்களும், மலைகளும்  உருகி  கடல் நீர் மட்டத்தினை உயர்த்தி நிலமட்டம் தாழ்ந்து  வெள்ளப்பெருக்கு  முதல் நீர் சூழ்ந்த பேர்டர்களை உருவாக்க இன்னொரு பகுதியில்  கடும் வரட்சியும், பஞ்சமுமான நேரெதிர் சூழ் நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது. பூமித்தகடானது தன் குளிர்ச்சியை இழந்து வெப்ப நிலையில் அதிகரிக்கும் போது  கஜா புயல் போன்ற  இயற்கைப்பேரிடர்களின் அழிவுகள்  அதிகரிக்கின்றன.

தொழிற்புரட்சி எனும் பெயரிலும் நகரமயமாக்கல் எனும் பெயரிலும் கிராமங்கள் அழிக்கப்பட்டு  இயல்பான இயற்கையோடு இணைந்து வாழும் மக்களின்  வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு   விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டு காங்கிரிட் கூடாரங்களாக்கி பூமியை எலும்புக்கூடாக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கபப்டுகின்றன.

அடுத்த பத்தாண்டுகளுக்குள் முழு உலகமுமே மாபெரும்   நல்ல நீருக்காக  தவிக்க போவதாக அனைத்து நாடுகளும் மக்களை எச்சரிக்க ஆரம்பித்டிருக்கின்றன. நீரை சேமியுங்கள் வீண் விரயம் செய்ய வேண்டாம்  எனும் பிரச்சாரங்கள் தொடர்ந்தாலும் மக்கள் அதைக்குறித்து அக்கறை இல்லாதவர்களாகவே வாழ்கின்றார்கள்.

உலகளாவிய  ரிதியில் நீர்ப்பங்கீட்டுக்காக  பல மோதல்களும், வழக்குகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. 

மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது கண்டிப்பாகத் தண்ணீருக்காகத்தான் வரும் என்று உலக வல்லுனர்கள்   கூறுகின்றனர்.

நாடுகளுக்கிடையில் மட்டுமல்லாது நாட்டு மக்களுக்குள்ளும் விரோதங்களை உருவாக்கி மா பெரும் அழிவுகளை  பஞ்சங்களை  அனுபவிக்கும் சூழலையும் உருவாக்குகின்றது.  
  
ஐ.நாவின் கணக்கெடுப்பின் படி உலகத்தில் 1.1 பில்லியன் மக்கள் தங்கள் அத்தியாவசியத்தேவைகளுக்கான நீரும், 2.6 பில்லியன் மக்கள் தங்களை சுத்தமாக வைத்திருக்க தேவையான நீரும் இல்லாமல் தவிக்கின்றார்கள். 

உலகத்தில்  பல பாகங்களிலும் 5000 குழந்தைகள்  நீரின்றி ஆரோக்கிய க்குறைபாட்டால் இறக்கின்றார்கள். இத்தரவுகள் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் மட்டுமே... பதிவு செய்யப்படாமல் இன்னும் பல்லாயிரம் மக்கள் அரசுகளின் மெத்தனத்தினால் மூடி மறைக்கப்படலாம்.  

பூமியைசுற்றி சுமார் 1.4 பில்லியன் கன மீட்டர் தூரம் நீர் இருக்கின்றது. அதில் பயன் படுத்தக்கூடிய நல்ல நீர் வளம் என்பது  2.5 சதவீதம் வரை உள்ளது. நன்னீர் சுமார் 70 சதவீதம் polar caps  அல்லது மலைகளின் மீது நிரந்தர பனிக்கட்டி வடிவில் உறைந்திருக்கின்றது. மீதமுள்ள 30 சதவீதத்தில் 97 சத வீத நீர் நிலத்தடி நீராக சேமிக்கபப்ட்டு மனிதர்களின் அத்தியாவசியத்தேவைகளுக்கு பயன் பட  எஞ்சிய  3 வீத நீர் தான்  ஆறுகள், குளங்கள் மூலம் கிடைக்கின்றது.  

தற்காலத்தில் தண்ணீரின் முக்கியத்தேவைகளை இருவகையாக பிரிக்கலாம்

1.குடிநீர், ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும்  அத்தியாவசிய, அடிப்படை  விவசாயத்தேவைகளுக்கானது. 
2. தொழில் துறை சம்பந்தமான பயன் பாடுகள். கண்டுபிடிப்ப்புக்கள், சோதனைகள் இன்ன பிற அவசியமானவை,அனாவசியத்தேவைகள் என இருவகையில் பிரிக்கலாம். 

மனிதர்களின் குறைந்தபட்ச ஆரோக்கியத்துக்காக  ஒரு நாளைக்கு ஒருவருக்கு கிட்டத்தட்ட ஐந்து லீட்டர்  குடி நீரும்   அவனின் அடிப்படை சுத்தப்படுத்தல் சுகாதார தேவைகளுக்கு 20 லீற்றர் நீரும்  தேவைப்படுகின்றது. அஃதே விவசாயம் மற்றும் அத்தியாவசியத்தேவைகளுக்காக  அதாவது மனிதத்தேவைகளுக்காக  உலகின் மொத்த நீரின்  93 சத வீதம் அவசியமாகின்றது.

மனிதன் உண்ணும் ஒரு ஆப்பிள் பழத்தினை விளைவிக்க 70 லீற்றர்  நீரும் காலை எழுந்ததும் புத்துணர்ச்சி தரும் காப்பியை  பருக .. அதாவது ஒரு கிலோ காப்பிக்கொட்டையை விளைவிக்க  21,000 லீற்றர் நீரும் அவசியமாகின்றது.

ஒரு கிலோ சர்க்கரைக்குரிய கரும்பையோ, அரிசியையோ விளைவிக்க 5000 லீற்றர் நீரும், சிறு தானியங்களை உற்பத்தி செய்ய  200 தொடக்கம் 300 லீற்றர் நீரும் அவசியமாகின்றது. 

மனிதன்  அணிய பருத்திச்செடியில் ஒரு சட்டை தயாரிக்க  2,700 லீற்றர் நீர் தேவைப்படுகின்றது.

ஒரு லீற்றர் பயோ டீசல் தயாரிக்கவோ 9000 லீற்றர்  நீர்  பயன் படுத்தப்படுகின்றது ..

இதனிடையே அதிக விளைச்சல் விரும்பி இரசாயன உரங்களை  தொடர்ந்து நிலத்தில் கொட்டி விளை நிலத்தினையும் மலடாக்கும் அரும் பெரும் பணி இன்னொரு புறம் அமோகமாக நடந்தேறிக்கொண்டுள்ளது. 

புதிய எரிபொருட்களின் பயன் பாடு,   சுற்றுச்சூழல் பராமரிப்பு, நகரமயமாக்கல் கொள்கை, தொழில் புரட்சி, இயற்கை வளங்கள் அழிப்பு, மோசமான கால நிலை, வரட்சி,பூமி வெப்பமயமாதல்  என ஆயிரம் காரணங்கள் இருக்கட்டும்.

மழைகாலத்திலேனும்  நிலத்தடி நீரை   சேமிக்க என்ன நடவடிக்கை எடுக்க போகின்றோம் ⁉️⁉️

இது தான்  இன்று  நம்  முன்  இருக்கும் கேள்வி.

இணையத்தில் கிடைத்த ஆய்வுகட்டுரைகளிலிருந்தும் சில தரவுகளை பெற்றேன்.
நிஷாந்தி பிரபாகரன்







3 கருத்துகள்:

  1. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் யோசிப்பதே கடினமாக இருக்கிறதே... எப்படி செயல்படுத்தப் போகிறோம்?

    பதிலளிநீக்கு
  2. மிக சிறப்பானதொரு கட்டுரை அக்கா.
    தண்ணீர் பிரச்சினை இப்போது எல்லா இடத்திலும் வந்தாச்சு...
    இது எவ்வளவு மோசமான பிரச்சினை என்பதையும் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதையும் மக்கள் உணரவில்லை என்றால் கஷடப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

    அலுவலக கணிப்பொறியில் இருந்து...

    சிஸ்டமும் சரியாகவில்லை காலும் சரியாகவில்லை.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!