24 மார்ச் 2016

எங்கேயும் போகவே இல்லை!

நீ என்னைத்தேடிவருவாய் என
கோயில் வாசலில்
உன்னிடம் யாசிப்பவனாக
காத்திருந்தேன்!
நீயோ
கண்ணை மூடிச்சென்றாய்!
நான்
என்ன செய்யட்டும்
உன் வாழ்க்கை அங்கேயே
மாற்றங்களின்றி....!!!!!!!

இப்படித்தான் கடவுள் புலம்பிட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன்! நிஜமாக இருக்குமோ?

நேரம்இல்லை என்பவர்களையும்,சூழ்நிலையின் மேல்பழிபோட்டு தப்பித்துக்
கொள்ள நினைப்பவர்களையும் எனக்கு பிடிப்பதே இல்லை  என சொன்னது ஒரு புறமிருக்க,இப்போதெல்லாம் எங்கள் வீட்டு கடிகாரம் வேகமாக ஓடுகின்றதோ என நினைக்கும் படி நேரமும், காலமும் ஓடி போய்க்கொண்டெ இருக்கின்றது.

தூக்கமும் துக்கமும் எது வந்தாலும் அதனதன் நேரம் மட்டும் தான் நினைவில் நிலைக்கின்றது. மீதி நேரம் எல்லாம் அடுத்து என்ன ஆர்டர் ? எங்கே? என்ன பொருட்கள் வாங்க வேண்டும்? எத்தனை மணிக்கு செல்ல வேண்டும்? எத்தனை பேர் வேலைக்கு வேண்டும்  என சிந்தித்து சிந்தித்து  கனவிலும் அதையே சொல்லி புலம்பும் படி ஆகிப்போனது என் நிலை!

ஆற அமர அமர்ந்திருந்து  நான் நலம்! நீங்கள் நலமா? உங்கள் வீட்டார் நலமா? ஆடு மாடு கோழி முதல்  நாய்க்குட்டி வரை நலமா? இன்று என்ன சமையல்? என்னுடையபதிவு படித்தாகி விட்டதா? இப்ப்ப்ப்ப்ப்படி யப்ப்படி கேள்விகளுக்கா பஞ்சம்.ஓரிரு மணி நேரம் அரட்டையில்  ஓடியதெல்லாம் கனவோ என நினைக்கும் படி தம்பி மாரெல்லாம் தூரமாய் போய் விட்டார்கள்! எங்க குமார் உட்பட யாருமே எப்படி அக்கா  இருக்கின்றீர்கள் என கேட்க மறந்து போனதையே நான் மறந்து போனேன்!

அப்பப்ப கில்லர் ஜீ மட்டும் எட்டிப்பார்த்து ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இட்டு விட்டு சென்றார். அவரின் ம்ம்ம் க்கும் ம்ம் ஒப்புவித்து விட்டதனால் அவரின் புதிய பதிவுக்கு கருத்திடாதது மன்னிக்கப்பட்டிருக்கும் என நம்புகின்றேன்! நான் கருத்து இடுவதற்கிடையில் அவர் இன்னும் நான்கு பதிவு இட்டாலும் இட்டு விடலாம்!

யாருடைய பதிவும் படிக்க முடியவில்லை, படிக்காததால் கருத்தும் இடம் வில்லை? படிக்காமல் எப்படி கருத்திடுவது என  கில்லர்ஜி சார் கேட்பதும் எனக்கு கேட்டு விட்டது! என்ன செய்வது! அத்தனை வேலைப்பளுவில் சிக்கிக்கொண்டேன்! சும்மா இருந்த என்னை வலைப்பூவில் பதிந்திடு அக்கா என இழுத்து வந்த தங்க மனசு குமாரிடம் தான் நீங்கள் நியாயம் கேட்க வேண்டும்!இன்னும் ஒரு வாரத்தில், அல்லது மாதத்தில் நேரம் கிடைக்கும் என  சொல்ல முடியாதவாறு  தொடரும் வேலைகள் நடுவே எதையேனும் படித்தாலும் தட்டச்சிடவோ,கருத்திடவோ சிந்தனைகள் ஒத்துழைப்பதில்லை,

சிந்தனைக்கும் தட்டச்சிடுவதற்கும் என்ன சம்பந்தம் என ரமணி .S ஐயா கேட்டதுகூடஎனக்கு கேட்டு விட்டது!உடல் களைத்தாலும் உள்ளமும்
களைக்கும் தானே? இருந்தாலும்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் எல்லோர் பதிவையும் படித்து கருத்திடுவேன் என்பது நிச்சயம் என்பதால் நான் வரவில்லை என என்னை மறந்து விடாதீர்கள் அபி ராஜசேகர் மேடம் !

ஆமாம்!  நீ வரவில்லை, படிக்கவில்லை, கருத்திடவில்லை என யார் கேட்டார்கள்  என அவர்கள் உண்மைகள்  மதுரைத்தமிழன் சார்  கேட்டாலும்  சரி, நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டேன், 

தொடர்கள் முதல் தொடராதவைகள் வரை  அனைத்தையும் தொடர முடியா
மைக்காக வருந்துகின்றேன்.

நான்கு பேரை மட்டும் சொல்லி நம்மையெல்லம கண்டுக்கவே இல்லையே என நீங்கள் யாருமே நினைத்து விடக்கூடாது என்பதனால் தங்கள் கருத்திடலால் என்னை எழுத வைக்கும் உங்கள் அனைவருக்கும் என் இதயத்தில் இடம் தந்து விட்ட இரகசியத்தையும் சொல்லி இன்று விடை பெறுகின்றேன்!

காலமும் நேரமும். கடவுளும் ஒத்துழைத்தால் நாளையே கூட மீண்டும் சந்திப்போம்!
**************************
 படம் இணையத்தில் கிடைத்ததே!

என் பதிவை  தேடி வந்தவர்களுக்காக! 

நான் ரசித்த சர்தர்ஜி  ஜோக்ஸ் சில! சிரிப்பு வந்தால் சிரித்து விடுங்கள்!

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார்.
சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். 

கிளம்பும் முன் சர்வரிடம்சொன்னார், 

"வெள்ளரிக்காயைநறுக்கிகண்களில்வைத்துக்கொண்டால், நீ ரொம்ப
அழகாயிருப்பே,அப்புறம் வெட்டிவேரில் நனைத்த தேங்காய் 
எண்
ணெயைதலைக்கு தடவினால் உன்தலைமுடியும் கருப்பாகிவிடும்." 
என்று சொல்ல,குழம்பிப்போன சர்வர் கேட்டார்,

 "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்டசொல்றீங்க?"

நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"

******************************************************

 வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார்.
” அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?”
” இல்லையே… 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு..”
” யோவ்… அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..சிங்குங்கறதாலேசும்மாவிடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படிபேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?”
” கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்… அதான்….”

***************************************************************

23 கருத்துகள்:


  1. கவிதை என்றாலே காததூரம் ஒடும் என்னையும் உங்கள் கவிதை நிறுத்தி ரசிக்க வைத்தது. குட்

    பதிலளிநீக்கு
  2. இந்த மதுரைதமிழனெல்லாம் ஒரு ஆளு என்று அவனுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கலாமா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தானே? அதுவும் சரிதான்!இனி பதில் சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லல்ல!

      நீக்கு
  3. நீங்கள் நடத்து ஹோட்டலுக்கு வந்தால் எப்படி டிப்ஸ் கொடுக்கனும் என்று ஐடியா கொடுத்த அம்மணிக்கு நன்றிகள்.

    உங்க ஹோட்டலுக்கு நா வந்தா டிப்ஸ் மட்டுமல்ல சாப்பிட்டதற்கு பணமும் தராமல் எஸ்கேப் ஆகிடும் சிங்கம் அல்லவா இந்த தமிழன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹா!@ இதை பதியும் போதே நானும் இப்படி நினைத்துகொண்டே தான் பந்திந்தேன்,சரியாக கேட்டு வீட்டீர்களே? பணம் தராட்டால் எங்க ஹோட்டலுக்கு வெங்காயம்,பூண்டு உரிக்கும் வேலைக்கு பிடித்துக்க வேண்டியது தான்.
      ஹோட்டல் ஆரம்பித்த புதிதில் பத்துக்லோ பத்து ரூபாக்கு வெங்காயம் வாங்கி அதை உரிக்க 100 ரூபா கூலி கொடுத்த கதை சொல்லி இப்போதும் சிரிக்கின்றோம்.

      நீக்கு
    2. இதுக்கு என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தால் 10 மிச்சம்[[[

      நீக்கு
  4. வேலைப்பளுவா? வேலையைக் கவனியுங்கள்.

    சர்தார்ஜி ஜோக்ஸ் என்று சொல்லாமல் மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ் என்று சொல்லலாம். அவர்கள் அப்படிச் சொல்லக் கூடாது என்று வழக்குப் போட்டிருக்கிறார்கள் என்று படித்தேன்.

    ஜோக்ஸ் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. நான் இப்பொழுது தான் உங்கள் எழுத்தக்களை வசிக்க ஆரம்பித்திருக்கிறேன் ....எனவே சீக்கிரம் வாருங்கள் ...

    காத்திருக்கிறேன் ...


    N h -140 யா ....பாவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இப்பொழுது தான் உங்கள் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன் ..

      நீக்கு
  6. ஹாஹாஹாஹாஹா மனப் புலம்பல் நன்றாகவே இருக்கின்றது
    ஜோக்குகள் ஜோக்கானதே... ரசித்தேன்
    முதலில் பிழைப்பு
    பிறகே வலைப்பு
    இதை மறக்காமல் வாழ்க்கை ஓடம் செல்லட்டும்....
    வாழ்த்துகள் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  7. கவிதையையும் NH-140 யையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  8. நிச்சயமாக பதிடுவது
    உங்கள் பணிக்கு கூடுதல் சக்தி சேர்க்கும்
    எப்படியும் எழுதிவிடுவது என மட்டும்
    உறுதி கொள்ளுங்கள்
    எழுதிவிடுவீர்கள்.
    மனதில் உள்ளதை அப்படியே
    எழுத்தில் சொல்வதும்
    படிப்பவரையும் அப்படியே உணரவைப்பதும்
    சாதாரண விஷயம் இல்லை
    அந்த கலை கைவரப் பெற்றிருக்கிறீர்கள்
    எனவே விடாது முடிந்தவரை எழுதுங்கள்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  9. அதெல்லாம் மறக்க மாட்டேன்கா.. வாட்ஸப்பில் நிமிசத்திற்கு ஒரு முறை பார்த்திட்டு தானே இருக்கேன்.. மெதுவாவே வாங்க... அனைத்தையும் பார்த்து கொண்டு பதிவு எழுதுவதே கஷ்டம்... சீக்கிரம் வாருங்கள்..

    பதிலளிநீக்கு
  10. அக்கா முதலில் தொழில்தான் என எப்பவும் சொல்வதை இங்கும் சொல்லிக் கொள்கிறேன்... நேரம் இருக்கும் போது எழுதுங்கள் போதும்.. எழுத்து ஒரு சிலருக்குத்தான் சோறு போடும்... நமக்கெலாம் உழைத்தால்தான் சோறு... நம் கவலைகளை மறக்கவும் கற்பனைகளை பாதுகாத்து வைக்கவும்தான் இந்த வலைப்பூ எல்லாம்... அதனால என்ன சொல்றேன்னா...
    முதல்ல வேலையைப் பார்த்துட்டு நேரம் இருக்கும் போது வாங்க...

    நானும் இப்போதெல்லாம் அதிகம் பதிவு எழுதுவதில்லை... வெள்ளிக்கிழமை மட்டும்தான் வாசிப்பு எல்லாம்...

    சரி... சரி... மறக்காம எப்ப வந்தாலும் நம்ம பதிவுகளை படிச்சிருங்க...

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் திறமைசாலி.. உங்களால் முடியும் எழுதுங்கள்... ஏதோ ஒரு இணையச்சந்தில் நானும் வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.. உங்கள் பதிவுகளை...
    உங்களால் நகைச்சுவையும் பதியமுடியுமா என்ற ஆச்சர்யத்தில் நான்..

    பதிலளிநீக்கு
  12. நேரம் கிடைக்கும்பொது எழுதுங்கள் நேரம் கிடக்கும்போது வாசியுங்கள். தவறு ஏதும் இல்லை.சமீப காலமாக எந்நாளும் அதிகம் வலைக்கு வர முடியவில்லை. ஆனால் சந்தர்ப்பம் கிடைக்குபோது நண்பர்களின் பழைய பதிவுகளையும் சேர்த்து படித்துவிடுவேன்.வேலைகளை முடித்து விட்டு வாருங்கள்

    பதிலளிநீக்கு
  13. அருமையான வரிகள்..

    சகோ இன்றுதான் நாங்கள் வலைத்தளம் வந்தோம். எங்களுக்கும் கடந்த சில தினங்களாக வேலைப்பளுதான். நீங்களும் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு வாருங்கள். அவசரமில்லை...நாங்களும் இப்போதுதான் எல்லோரது பதிவுகளையும் வாசிக்கத் தொடங்கிர்யிருக்கிறோம்...


    பதிலளிநீக்கு
  14. கவிதை அருமை முதலில் வேலை அதன் பின்பே இந்த வலையுலகு என்பதில் வேற கருத்தில்லை இன்றுவரை.அதனால் பிறர் புரிந்துகொள்ளாமல் போவது அவர்களின் இயலாமை. உங்கள் ஓய்வில் விரும்பியதை எழுதுங்கள் விரும்பி படித்து பின்னூட்டம் இட விரும்பியோர் வருவார்கள்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்,

    குடும்பம் மற்றும் பணியை தாண்டித்தான் எழுத்து. எழுத்து போன்ற ஆத்மார்த்தமான செயல், நமது தொழிலிலும் குடும்பத்திலும் பிரச்சனைகளற்ற சமயங்களில்தான் சிறக்கும் !

    கடமைகள் முக்கியம். நேரம் கிடைக்கும் போது தொடருங்கள்...

    தொடருவோம் !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
    http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  16. என்னக்கா புலம்பல்?

    தொழில் முக்கியமாக்கும்... முதலில் பிஸி என்ற வட்டத்தை சிறப்பாக முடித்துவிட்டு பிரியாக வாருங்கள்... நிறைய எழுதலாம்...

    நாங்கள்லாம் மறக்கவில்லை... உங்களைப் போல் எங்களுக்கும் சில பிஸிகள்(?) அவ்வளவே...

    அடுத்த மாதம் ஊருக்குப் போனால் குமார் ஜூன் வரை ரொம்ப பிஸி ஆயிருவேன்...

    வரலைன்னு புலம்பக் கூடாது ஆமா...

    தொடர்கிறோம் அக்கா...

    பதிலளிநீக்கு
  17. அம்மாடியோவ் இந்த நட்பூக்கள் எல்லோரும் இன்னும் இருக்கிங்களாப்பா? யாரையும் காணோமே? கடவுளைப்போல நானும் புலம்ப வேணுமோ!?

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!