20 ஜூன் 2018

தினகரனும் தீர்க்கதரிசனமும்!

எரே 14:14. தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால் .......!
ஒன்றும் தரிசியாதிருந்தும் தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!
நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும் போது.... பொய்க் குறியைச் சொல்லுகிறீர்கள். ஆகையால் நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். எசே 13:2,3,7.
எரே 14:14. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பியதுமில்லை அவர்களுக்கு கற்பித்ததுமில்லை! அவர்களோடே பேசினதுமில்லை..... அவர்கள் தங்கள் இருதயத்தின் கபடத்தை உங்களுக்கு தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.
மனதில் தோன்றுகின்றதை கூறும் இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று கர்த்தர் நம்மை எச்சரிக்கிறார்.
நியாயத்தீர்ப்பு நாளில் 
ஆண்டவரே! ஆண்டவரே! 
உம்முடைய (இயேசு) என்னும் நாமத்தில்தீர்க்கதரிசனம் உரைத்தோமல்லவா ? பிசாசுகளை துரத்தினோம் அல்லவா? அற்புதங்களை செய்தோம் அல்லவா? என்பார்கள்
ஆனால் இயேசுவோ இவர்களைப் பார்த்து அக்கிரம செய்கைக்காரர்களே என்னைவிட்டு அகன்று போங்கள், உங்களை நான் ஒருகாலும் அறியேன் என்று அவர்களுக்கு சொல்லுவேன் என்கின்றார்.
மத் 7:22,23.

2 பேதுரு 2:1-3 
1.கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2.அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
3.பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதல்ல தேவனுடைய வசனம் உங்களுக்கு சொல்வது எதுவென மட்டும் நிதானித்து கொள்ளுங்கள்.
தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம், அன்பு ஒருக்காலும் ஒழியாது. என 1 கொரிந்தியர் 13 ல் சொல்லப்படுவது போல் அழியாமல் நிலைப்பது அன்பும், நம் மனதில் நான் உருவக்குத்திக்கொள்ளும் தேவ வசனமும் தான்.

உங்கள் சொந்த புத்தியினாலும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கும் ஞானத்தினாலும் வசனம் சொல்வதை ஆராய்ந்து, நிதானித்து , தியானித்து சரியானதை பற்றிக்கொள்ளுங்கள்.
ஆமேன்

6 கருத்துகள்:

  1. என்ன ரொம்ப நாளா, ஆளக் காணோம், நிஷா? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். இந்த வருடத்தின் முதல் பதிவே இன்று தான் இட்டேன். வேலைகள் அதிகம். நீங்கள் பேஸ்புக்கில் இருக்கின்றீர்களோ? இருந்திருந்தால் அங்கே அவ்வப்போது நான் வருவதை கண்டிருப்பீர்கள். நீங்கள் நலம தானே சார்?

      நீக்கு
  2. நலமா நிஷா .

    இதெல்லாம்ம் நாம் சொன்னா நம்மை துஷ்ட ஆவிகனு சொல்லிடுவாங்கப்பா ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லட்டும்பா, நியாயத்தீர்ப்பு நாளில் அதற்கான பலனை அவரவர் அடைவார்கள் தானே? அவரவருக்குள் இருக்கும் ஆவிகள் அவரவர் செய்கைகைளால் வெளிப்படுத்தப்படும்.

      நான் நலம்பா நீங்கள் நலமா?

      நீக்கு
    2. ஏஞ்சல் மக்களை சுயமாய் சிந்திக்க விடாமல் மூளைச்சலவை செய்பவர்களில் அரசியல்வாதிகளுக்கு சளைத்தவர்களாக இல்லை இந்தமாதிரி மத வியாபாரிகள். இவர்களிடம் நாம் கவனமாகாத்தான் இருக்க வேண்டும். வசனம் அறிந்த நாம் மௌனமாய் செலவதனால் பல ஆத்மாக்களை தவறான வழி நடத்தலுக்கு துணை செல்கின்றோம். உள்ளதை உள்ளபடி எடுத்து சொல்ல தயங்கத்தேவையில்லை என்பது என் கருத்து. இந்த மதவாதிகள் ஏழைகளையும், ஆழை நாடுகளையும் தான் இலக்கு வைக்கின்றார்கள். மேலை நாடுகளின் இப்படி இல்லைத்தானே? உள்ளீருக்கும் நாமே இதை கண்டு கொள்ளாமல் போனால் கிறிஸ்துவின் நாமத்தை துஷிக்கும் செயலுக்கு உடந்தையானவர்களாகவும் ஆவோம்.

      நீக்கு
  3. ஏஞ்சல் மக்களை சுயமாய் சிந்திக்க விடாமல் மூளைச்சலவை செய்பவர்களில் அரசியல்வாதிகளுக்கு சளைத்தவர்களால் இல்லை இந்தமாதிரி மத வியாபாரிகள். இவர்களிடம் நாம் கவனமாகாத்தான் இருக்க வேண்டும். வசனம் அறிந்த நாம் மௌனமாய் செலவதனால் பல ஆத்மாக்களை தவறான வழி நடத்தலுக்கு துணை செல்கின்றோம். உள்ளதை உள்ளபடி எடுத்து சொல்ல தயங்கத்தேவையில்லை என்பது என் கருத்து. இந்த மதவாதிகள் ஏழைகளையும், ஆழை நாடுகளையும் தான் இலக்கு வைக்கின்றார்கள். மேலை நாடுகளின் இப்படி இல்லைத்தானே?

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!