07 மே 2019

எதிலிகளை, எதிலிகள் உணராமல் ...?

விளைச்சல்களை வளைத்துண்ணும் 
செயற்கரிய செயற்கைப்பரப்பலால்
துரோகிகள் சூழ் உலகிலே
எதிலிகளாயானோர்
எதிர்காலம் இருண்டதாய்
எதிரிகள் நிறைந்ததாய்
மனித மமதையால் மதம் பிடித்தாட
மதமென்ன மனமென்ன 
இனமென்ன இடமென்ன 
எத்தனை தனமிருந்தென்ன? 
அத்தனையும் ஒரு நொடியில் ....? 
விதி என்போம், சதி என்போம், 
நம் மதி மறைக்க துதி செய்வோம்.

வளியதுக்கெல்லை இல்லை 
என்றுணர்ந்தோர் - வலியது 
வலிமையாய் வழியதை,அடைக்குமோ?

பாகிஸ்தானிலிருந்து எதிலிகளாய் இலங்கையின் தஞ்சமடைந்து இருப்பிடம் தேடி வீதிகளில் அலையும் 
குழந்தை 😭😭

நாங்களும் ஒரு நாள் இப்படித்தான் அலைந்தோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!