16 மார்ச் 2019

மேலை நாட்டுக்கல்வித்திட்டங்களின் சிறப்பம்சம் என்ன?

ஐரோப்பா, பிரிட்டன்,அமெரிக்கா, கனடாவின் கல்வித்திட்டங்களுக்கும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் கல்வித்திட்டங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகள் என்ன? ஏன்? எனும் தலைப்பில்   நீண்ட விவாதம் ஒன்று பேஸ்புக்கில் நடந்தது. அப்பதிவை இந்த லிங்கில் காணலாம்
தமிழ் நாட்டு நட்புக்கள் ஐந்தாம், எட்டாம் வகுப்பில் தேர்வு வைப்பதை ஏன் எதிர்க்கின்றீர்கள் என பகிர முடியுமா?
இலங்கை, இந்தியா சம்பந்தமான விடயங்களை ஆழமாக உள்வாங்கும் போது பல கருத்துக்கள் என் வாழ்வியலிலிருந்து மாறுபட்டு நெகடிவ்வாகவே இருக்கின்றது.
எனக்கு பாசிடிவ் உங்களுக்கு நெகடிவ் ஆகின்றது. உங்கள் பாசிடிவ் எனக்கு நெகடிவ் ஆகின்றது என குறை சொல்லி கடந்து செல்வது சமுகத்துக்கு நான் செய்யும் நன்மையாகுமா?
அதெப்படி எல்லாமே நெகடிவ்வாகவே எனக்குள் தோன்றுகின்றது?
பல நேரம் நான் கடந்து வந்த வாழ்க்கை அனுபவத்தை பகிரும் போது ஏற்றுக்கொள்ள சிரமப்படுவதோடு, எதிர் கருத்து சொன்னால் என் நட்பு பாதிக்கப்படும் அல்லது மனம் வருத்தமடையும் என நினைத்து ஒதுங்கி செல்கின்றீர்கள்./ அல்லது எனக்கு அப்படி தோன்றுகின்றதா? .
சும்மா பெயரளவில் நட்புப்பட்டியலில் இருக்கவேண்டுமானால் நாம் ஏன் நட்பாக வேண்டும்? தொடர வேண்டும்?
தமக்கு பிரியமானவர்கள் என்பதனால் தவறென்றுணர்ந்ததை, தட்டிக்கேட்காமல் 
தட்டிக்கொடுத்தும் ஆதரித்தும் சமூகத்தில் இனம் காட்டப்படுவதை விட குட்டி உணர்த்தி திருத்துவது சமூகத்துக்கு செய்யக்கூடிய கடமை என்பேன்

முகஸ்துதி செய்பவர்களால் நாம் வளர்ச்சி யடையப்போவதே இல்லை. அவர்கள் நம் நலன் விரும்பிகளாக இருக்கவும் முடியாது. .
செய்யும் தவறை சொன்னால் பலரால் உடனடியாக புரிந்து கொள்ள முடியாமல் போகலாம், ஆனால் காலம் அவர்களுக்கு உணர்த்தும் போது அவர்களே நம்மை தேடி வருவார்கள். தம் தவறுகளை உணர்வார்கள். அப்போதும் நாம் நிமிர்ந்து தான் நிற்போம். இதுவும் நான் கடந்து வந்த அனுபவம் தான்.
அதிருக்கட்டும்.
சுவிஸில் ஐந்தாம் ஆறாம், வகுப்பில் படிக்கும் போது வைக்கப்படும் தேர்வுகளில் கிடைக்கும் புள்ளிகள் தான் மாணவர்களுக்கான் உயர் கல்வி, மற்றும் வேலை வாய்ப்பை தீர்மானிக்கின்றது. அதனால் நான்காம் வகுப்பிலிருந்து பாடங்கள் இறுக்கமாகும், ஐந்தாம் வகுப்பில் முழு மதிப்பெண் எடுக்கா விட்டாலும் ஆறாம் வகுப்பில் அதை சீராக்க வேண்டும். ஏழாம் வகுப்பில் அவர்கள் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு தொழிற்படிப்பு, மேற்படிப்பு என இருவழிகளில் பிரிக்கப்பட்டு விடுவார்கள். அதாவது ஒரு பிள்ளையின் எதிர்கால இலக்குகள் அவன் 16 வயதுக்கு முன் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. ஐந்து வயதில் தொடங்கும் கிண்டர்கார்டன் பாலர் பள்ளி, ஏழாம் வகுப்பில் அவன் இலக்குகளை தீர்மானிக்க வைக்கின்றது.
நீங்கள் பத்தாம் வகுப்பு வரை தேர்வே வேண்டாம் என்கின்றீர்கள். என்ன காரணம்?
சுவிஸ் நாட்டின் கல்வி குறித்து விரிவான பதிலை நாளை பதிவாக்குகின்றேன். அதற்கு முன் ஏனைய நாட்டு நட்புக்கள் தங்கள் கருத்துக்களை பகிருங்களேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!