29 மார்ச் 2019

சதா ரணமாகும் தேர்வுகள்

சாதாரணம்
சதா ரணமெனும் 
சகல கலா ரணமாகுவதாக
சத்தமில்லா யுத்தமொன்று

சங்கடம் தருவதாய் சிலரும்
சங்கெடுத்து ஊதுவதாக பலரும், 
என்னைப் பார் 
என் பெண்ணைபபார்
உன்னை போல் என் 
உறவில்லை என்போரும்

கற்றலை,குற்றமாக்கி
தேர்வின் புள்ளிகள்
வாழ்வின் கரும்புள்ளிகளாய்
வடுக்களாய் தங்க வைப்போரும்
தாம் கடந்த முட் பாதை அறியாதோராய்...!?

சாதாரணமாக கடந்தவைகளெல்லாம் 
சாதனைப்பட்டியலில் இடம் பிடிப்பதும்
சாதனைகள் செய்வோரை சகதியில் எறிவதும் 
சாத்தானின் போதனைகளாய் கடப்போம்.

நீ நானாகவும்,
நான நீயாகவும் 
அவன் அவளாகவும்
அவள் அவனாகவும்
ஒப்பீடு தப்பீடாய் 
பட்டறிவும்,படிப்பறிவும்
பட்டம் போல் வானம் தொடும், 
காலமது அதை உணர்த்தும்

தேர்வென்பதன் வெற்றிகளால் கொக்கரிப்போர் 
வாழ்க்கை தேரென்பதை இழுக்க
முடியாதோராய்..... ?

கற்றறிந்தோர் முயலாமையினால் 
முடங்கி விட............!?
பட்டறிவால் வென்றோர் உயர்ந்து நிற்க 
முயல் ஆமை கதை இங்கே நினைவில் வரும்,

தோற்றவர்கள் வீழ்ந்ததில்லை
வென்றவர்கள் எல்லோரும் வாழ்ந்ததும் இல்லை.

வாழ்க்கை என்பது ஒரு வட்டம், 
காலம் மாறும் காட்சிகள் கலையும், 
கலைந்த கனவுகள் 
தொலைந்த இரவுகள
கனவாகிப்போகும்,

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.. 
நம்பிக்கை எங்கள் தும்பிக்கை!

அவரவர் அறிவும், ஆற்றலும் அவரவர்க்கே உரிமை.
மனித ஆற்றல் சக்தி வாய்ந்தது, 
தினம் மலர்வதும் உதிர்வதனாலும் பூக்கள் சினப்பதில்லை. 
நீங்கள் நாள் தோறும் புதிதாக மலருங்கள்
வாழ்க்கை உங்கள் வசப்படும்........!

#சதா_ரணமாகும்_தேர்வு


1 கருத்து:

  1. சதா ரணமாகும் தேர்வுகள்.....

    சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் நிஷா.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!