05 பிப்ரவரி 2019

அம்மா...!

அம்மா...!
அம்மா எனும் பெண், அப்பா எனும் ஆண் உறவை முதலில்  அறிமுகப்படுத்துகின்றாள்.
அம்மா என்பவள் அப்பாவை எப்படி உருவகப்படுத்துகின்றாளோ அப்படி தான் குழந்தைகள் மனதில் ஆண் எனும் அப்பாவினை குறித்த பிம்பம் பதிவாகின்றது. அதே போல் அண்ணன், தம்பி என எந்த உறவானாலும் ஒரு பெண்குழந்தைக்கு தாய் தான் முதல் ஆசான்.
மாதா,பிதா,குரு தெய்வம். என தெய்வத்தை கடைசியில் வைத்து தாயை முதன்மைப்படுத்தும் சமூகம் எங்கள் தமிழ்ச்சமூகம்.
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் 
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஔவையார் வாக்கு.

உன் தாயையும் தகப்பனையும் கனப்படுத்துவாயாக என்கின்றது கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிள்.
உன் தாய்க்கு நீ செய்யும் பணிவிடை நீ சொர்க்கம் செல்வதற்கான அனுமதிச்சீட்டு என்கின்றது குரான்.
எல்லா மத நம்பிக்கைகளுமே அன்னை எனும் தாய்மையை மதிக்க சொல்கின்றன.
அன்னை எனும் பெண் தான் ஆண் குழந்தைக்கோ பெண் குழந்தைக்கோ முதல் ஆதர்ச நாயகி, வழிகாட்டி,ஆசான்,கடவுள் எல்லாமே அன்னை தான். குறைந்தது 3 வயது வரையிலேனும் அன்னை மட்டுமே ஒரு குழந்தைக்கு நெருக்கமானவளாக இருக்கின்றாள். வளர்ந்து விட்டாலும் பல ஆண் குழந்தைகள் அன்னையை சார்ந்தே வாழ பழகி இருக்கின்றார்கள். அல்லது அப்படி பழக்கப்ப்டுத்தப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
பெண் குழந்தைக்கு அப்பா என்பவன் ஆதர்ச நாயகனாக, வழிகாட்டியான,முதல் தோழனாக அறிமுகமாக்கப்படுவதும் அன்னை எனும் பெண்ணினால் தான்.
ஆனால் காலம் சுழல்கின்றது. பெ|ண் என்பவள் சுயமானவள், தனித்துவமானவள். எவளும் அவளுக்கு இணையில்லை என்பதையும் பெண்ணாலே அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்பதையும் அவள் நிருபித்து கொண்டிருக்கின்றாள்.
பெண்ணியம் எனும் பெயரில் ஆண்களை குறித்த பிரச்சாரமும், விமர்சனமும் ஆண்களுக்கு எதிரானதொரு சமுகத்தை உருவாக்கி கொண்டிருப்பதை போல் ஆண் குழந்தைகள் மனதிலும் ஆண் என்பவனைக்குறித்த தவறான பிம்பம் அதே அன்னையினால் உருவாக்கபப்டுமானால் எமது சமுகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என என்றேனும் சிந்தித்திருக்கின்றோமா?
தமிழச்சமூகத்தின் கலாச்சாரம் சார்ந்த பண்பாட்டை காப்பதிலும் பெண்களுக்கான பங்கு அளப்பரியது. 
தொன்மை மிக்க தமிழர் வரலாறு பெண்ணை அடிமைப்படுத்தவில்லை.

அவள் அடிமைப்படுத்தப்பட்டதான உளவியல் தாக்கத்தை உருவாக்கி அவளை கொண்டே அவளை அடிமைப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கின்றது.
இனிவரும் காலத்தில் ஆண்களை குறித்த பெண்களுக்கான புரிதல்களும், 
ஆண்களுக்கு தம்மை குறித்த புரிதல்களும் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய தாய்மார்களான் பெண்கள் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.

அதை பெண்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. சமுக வலைத்தளங்களினூடாக பற்றவைக்கப்படும் நெருப்பை அணைத்து தாம் சாம்பலாகுவதா? சரித்திரமாகுவதா என்பதை ஆண்கள் முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தந்தில் இருக்கின்றார்கள்.
நமது சமுதாயத்தில் ஆண்கள் நல்லவர்களாக இல்லை, வரதட்சனை கொடுமை செய்கின்றார்கள். மிதிக்கின்றார்கள் என்றால் அவனை அப்படி உருவாக்கியது யார் தவறு?
சமூக அக்கறை கொண்ட ஆணும், பெண்ணும் தம்மை சுய ஆராய்ச்சிசெய்து சீர்ப்படுத்தாவிட்டால் எமது எதிர்கால சந்ததிகளுக்கான தவறான முன்னுதாரணங்களாக நாம் வரலாற்றில் பதிவாக்கப்படுவோம்.
சிந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!