21 ஜூன் 2019

அம்னீசியா எனும் .மறதி நோய் தமிழர் பரம்பரைக்கானதோ?

எனக்கொரு சந்தேகம்
யாராச்சும் தீர்த்து வையுங்கப்பனே..... 
🤓🤓🧐🧐🧐🧐

தமிழர் பிரதேசங்களில் புத்த சிலைகள் தெருவுக்கு தெரு முளைத்தாலும் விக்கினமில்லை, 
சிங்களவர் எங்கட பகுதிகளையெல்லாம் சுவிகரித்துகொண்டாலும் குற்றமில்லை 
முள்ளிவாய்க்காலில் செத்ததுகளுக்கு பால் சோறு பொங்கி தின்பதை ஆண்டு திவசத்தில் சேர்த்துக்குவோம். 
வெடி கொழுத்தி கொண்டாடியதை துக்க வீட்டு பறை மேளமாகவும், சாவுக்கு முன் வெடிக்கும் வெடியாகவும் மாத்தி யோசிப்போம்.

ஏன் எண்டால் சிங்களவரும், தமிழரும் சகோதரர் இனமுங்க........ எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்,, நாங்க அண்ணன் தம்பிங்க.. நேத்து அடிச்சிக்கிட்டோம், இன்னிக்கும் சேர்ந்துக்குவோம், நாளை திரும்ப அடிச்சிப்போமுங்க. 
எங்கட சாமியும், அவங்கட சாமியும் ஒண்டுங்க. புராணங்கள் கூட அதை சொல்லுதுங்க. நாங்க ஆயிரம் வருடத்துக்கு முந்திய தோஸ்துக்களாக்கும்.

ஆனால் பாருங்க......
சோனகர் தான் எங்கட ஜென்ம விரோதிகள், 
வந்தான் வரத்தான்களுக்கு எங்கட உரிமையை விட்டுக்கொடுக்க ஏலாதுங்க .... எங்களுக்காக தீர்வு சிங்கள தேரர் மூலம் தான் சாத்தியம் என கலமுனை வடக்கு பிரதேச சபைக்கான தரமுயர்த்த கோரி சிங்கள தேரரை தெய்வமாக்கி, அவரை கும்பிடுவதெல்லாம் வேறே ரகமுங்க..

ஒருத்தர் வந்து சொல்றார்... பழய கதை எல்லாம் பேசக்கூடாதாம்,, இப்ப இருக்கும் நிலையில் முஸ்லிம்களிடமிருந்து எங்கட உரிமையை காப்பாத்தணுமாம்.... இல்லாங்காட்டில் கிழக்கையே முஸ்லிம்கள் தங்களுக்கென பிரிச்செடுத்திருவாங்களாம்..
அவர் சொல்வதும் சரி தான் போல கிடக்குது.
ஏன் எனில் வடக்கு வடக்கு என வடக்கின் செழிப்பு,அறிவு, வீரம், வளமெல்லாம் நாசமாக்கி,எங்கட பிள்ளைகளையும் கலாச்சார சீழழிவுக்கும் திணிச்சி, உலகம் போற்றிய தமிழ அறிஞர்களை உருவாக்கிய யாழ்ப்பாணத்தை நாசமாக்கி முடிச்சாச்சுங்க. இனி அங்கே கிண்டிக்கிளற ஒண்டுமில்லையுங்க..
வடக்கும் நாசமாச்சு.... சிங்களவன் ஆண்டாலும் அவன் பிரதேசங்களும் ஒன்னும் சொல்லிக்கொள்ளும் படி முன்னேற முடியல்ல. பெரும்பான்மை இனமென்பதை தக்க வைக்க வதவதவென பிள்ளைகுட்டிகளும் பெருகிப்போனார்கள்.
நாங்கல்லாம் நக்கித்தின்ன வழியில்லாமல் திரிய.... சோனகர் மட்டும் மாட மாளிகை கட்டுவதும், கல்வியில் முன்னேறுவதும், பொருளாதாரத்தில் உயர விடுவதும் தப்பாச்சே? அதனால் நாடும், நாட்டு மக்களும் உயர்ந்து விடுவார்களே? கிழக்கு மாகாணமும் முன்னேறி விடுமே... விட்டு வைக்கலாமா?
எங்களுக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்ககூடாது. எல்லாரும் எங்கட அடிமையாக கிடக்கணும். அதுக்கு மிரட்டிகிட்டே இருக்கணும். அப்புடியே மட்டக்களப்பில் இருக்கும் எச்ச சொச்ச தமிழரையும் நாட்டை விட்டு ஓட விரட்டணும் எதிர்கால திட்டத்தோடு கிளம்பி இருக்கும் சிங்கள இனவாதிகளுக்கு ஒரு கை கொடுக்கத்தான் வேண்டும். பழசு எல்லாம் கிண்டி நினைவு படுத்தக்கூடாது. தப்பித்தவறி நினைவுக்கு வந்திட்டால் எங்கட தமிழனுக்கு ரோசம் வந்திடும்,. உப்புப்போட்டு சோத்தை தின்னுவதும் நினைவுக்கு வந்திரும். அதனால் தேரரை தெய்வமாக்குவதை வேடிக்கை பார்க்கணும்.
அந்த தேரரை ஒருக்கா எங்கட அரசியல் கைதிகளுக்கா உண்ணாவிரதம் இருக்க சொல்லுங்களேன்பா... அந்த கோப்புலாவ காணிகளையும் விடுதலையாக்கி தர சொல்லி கேளுங்க.. ... அவர் மட்டும் அப்படி செய்திட்டால் எண்ட சாமியும், அவரு தான் என 100 அடி சிலை வைச்சு கும்பிட்டுக்குவேன்.
இப்பவும் எனக்கு ஒன்னும் புரியல்ல.
தமிழ்,தமிழர் உரிமை, தனி ஆட்சி என போராடுவோர் தமக்கான சந்தர்ப்பங்களை எப்படி பயன் படுத்தி இருக்கின்றார்கள்? தமிழரிட்ட பொறுப்பு கொடுத்த எதில் நாங்க சாதித்து காட்டி இருக்கின்றோம் என ஒருக்கா எனக்கும் சொல்லுங்க் தம்பி, ஐயாமாரே?
கிழக்கில்,தமிழர் வசமிருக்கும் பகுதிகளின் பிரதேச சபைகளினால் ஆரம்பிக்கபப்ட்ட, அபிவிருத்திகளை, திட்டமிட்டிருக்கும் மக்கள் செயல் திட்டங்களை ஒருக்கா சொல்ல முடியுமா?
அவனிவன்,எவன் என சாக்கு போக்குகளை சொல்லாமல் இண்டைக்கு கல்முனையில் நிற்கும் எந்த தமிழ் அரசியல் வாதி உங்கட நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கின்றான்? 
சும்மா பூச்சாண்டி காட்டாமல், தானும் செய்யாமல, செய்பவர்களையும் மிரட்டி உருட்டி தடுக்காமல் தமிழர் பிரதேசங்களை முன்னேற்ற செயல்படுவோர் ஆரேனும் இருந்தால் சொல்லுங்க.

ஒவ்வொரு முஸ்லிமும் தன் கடமை உணர்ந்து,தன் இனத்தின், சமூகத்தின், பிரதேசத்தின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்போடு செயல் படுவதை பார்த்து உங்களுக்கு பொறாமை வந்தால்.... நீங்களும் அவர்களை போல் உங்கள இன, சனத்துக்காக அர்ப்பணிப்போட வாழ்ந்து காட்டுங்க.. உங்களை நம்பி வரும் மக்கள் முன்னேற்றத்தை குறித்து அக்கறை காட்டுங்க...முஸ்லிம்களின் இனப்பற்றை, மதப்பற்றை பாராட்ட வேண்டாம். பாடமாக எடுத்துக்கலாம் .
சோனகர் சார்பான அரசியல் வாதிகள் அரபி நாடுகளிடம் போய் பேசி தங்கட பகுதிகளை அபிவிருத்தி செய்தால் நீங்களும் உங்களுக்கு உதவும் நாடுகள், புலம் பெயர் தமிழ் மக்களோட பேசி தமிழர் பகுதிகளின் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாமே? உங்களுக்கும் அபாரமான் வாய்ப்புக்கள் கொட்டிக்கிடந்தது தானே?
எப்பவும் உருட்டல்,மிரட்டல், அலட்டல் கடையடைப்பு,கதவடைப்பு ......... ஏன் எதுக்கு என எதிர்த்து கேள்வி கேட்டால் உயிரடைப்பு..... இதை தவிர நீங்கல்லாம் என்ன தான் செய்திங்க?
எல்லாத்துக்கும் அரசை நம்பாமல் தமக்கான் தன்னிறைவில் ஒரு சமூகம் முன்னேறுவதை பார்த்து பொறாமைப்பட்டு, நீயா, நானா எனும் ஈகோவில் சேரக்கூடாத இடம் சேர்ந்து, சேற்றில் புரண்டு தான் ஆகனும் என்பதெல்லாம் நியாயமாப்படுதாங்க?
ஊரில,உலகில எனக்கு தெரியாதது அண்டம் அளவு கிடக்குதுங்க... நான் ஒரு ஓரமா புறு புறுத்து கிடந்தாலும், நம்மட பேச்சை, ஏச்சை பொருட்டா மதிக்கும் தம்பி, தங்கைச்சி மார் எதிர்காலம் நினைச்சால் பயம்ம்ம்ம்மா இருக்குதுங்களே..?
அம்னீசியா எனும் .மறதி நோய் தமிழர் பரம்பரைக்கானதோ? எண்ட ஆதங்கம் தப்புன்னால் ஒரு வார்த்தை சொல்லிருங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!