17 டிசம்பர் 2018

சோலைவனம் பாலைவனம் ஆகின்றதா?

கஜா பேரிடர் இத்தனை பாதிப்புக்களை தந்தும் அரசும், மீடியாக்களும் அதை அண்டை மாநிலங்கள் உட்பட வெளி உலகமே தெரியாமல் மறைத்தொழித்தது ஏன் ?
இதன் பின்னனி என்ன?
டெல்டா மாவட்டங்களில் நடந்தது என்ன?
நடபப்து என்ன? 
எட்டுவழி சாலைக்காக எதிர்ப்பு போராட்டம் மட்டும் தானே நடந்தது என்கின்றீர்களா?

நகரம் தொழில் மயமாக்கப்படும் போது இதுவெல்லாம் சகஜம் என கடந்து சென்றீர்களா?
அதே நேரம் எமன் உங்கள் தலை மேல் வட்ட மிட்டு கடந்ததை உணர்ந்தீர்களா?
உங்கள் குழந்தைகள் குறித்தும் அவர்கள் எதிர்காலம் குறித்தும் எத்தனையோ திட்டங்கள் தீட்டும் நீங்கள் அவர்களுக்கான் ஆரோக்கியமான, வளமான சூழல் ஒன்றை உருவாக்கி தருவதே கல்வி செல்வத்தினை விடவும் அவர்கள் வாழ் நாட்களை நிம்மதியாக வாழவும், அதிகரிக்கவும் செய்யும் என அறிந்திருக்கின்றீர்களா?
பட்டமும், பதவியும், சொத்தும் , வைரமும், வைடூரியமும் சேமித்து கொடுப்பதே உங்கள் இலக்கென கொண்டு நாளைய சந்ததிக்காக அர்ப்பணிப்பதனாக் சொல்லி செல்லும் பாதை மாயை உலகை வழி காட்டி நிற்பதை குறித்தேனும் சிந்தித்திருக்கின்றீர்களா?
ஒரு பக்கம் பசுமைத்தேடல் எனும் விளம்பரம், அதற்காக பற்பல் யுக்திகளும் செலவுகளுமாக 
நானும் சமூக ஆர்வலர், இயற்கை விவசாயி என 
பதிவுகள் இட காட்டும் ஆர்வத்தினை 
அதே பசுமையை அழித்தொழிக்கப்படும் போது கண்டும் காணாது கடந்து போவது ஏன்?

வளங்கள் பறி போகக்கூடாது எனும் நல்லெண்ணத்தில் உண்மைகளை எழுதி வெளியிட்டதற்காக பொலிஸ் கஸ்டடியில் கொண்டு சென்று வதை பட்ட சமுகத்து ஆர்வலர்கள் மீதான உங்கள் அக்கறை என்ன?
நடப்பது என்ன? ஏன்? கேள்விகள் மட்டுமே உங்கள் முன் இருக்கின்றது. அதற்கான விடைகளை தேடுங்கள்.
நடந்தது என்ன என்பதை பார்ப்போம். இந்த வருடம் நடுப்பகுதியில் வந்த கட்டுரை ஒன்றை இங்கே பகிர்கின்றேன்.
டெல்டாவின் கடைமடை பகுதியில் அடுத்தடுத்த புதிய ongc கிணறுகள். தாங்குமா திருவாரூர்?
பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, சுற்றிலும் லேசர் வளையங்கள் பாதுகாப்பில் இயங்கி கொண்டிருக்கும் கரையங்காடு ongc நிறுவனத்தின் எண்ணை கிணற்றிற்கு அருகே சுமார் 1000 மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில் உள்ள விளாங்காடு கிராமத்தில் புதிய எண்ணை கிணறுகள் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது ongc நிறுவனம்.
இடும்பாவனம்,கற்பகநாதர்குளம் துளசியாப்பட்டினம் பகுதியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையின் இடது புறத்தில் இந்த பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றது. கடந்த இரு வருடங்களாக சிரமைக்கப்படாத சாலைகள் அவசர அவசரமாக சரிசெய்யப்பட்டதை சில முகநூல் போராளிகள் எங்களுக்கு கிடைத்த வெற்றி என மார்தட்டி கொண்டார்கள் ஆனால் இப்பொழுதுதான் அதற்கான வெற்றி யாருக்கென்பது தெரிகிறது என்கிறார்கள் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
உலக புகழ்பெற்ற கற்பகநாதர்குளம்,இடும்பாவம் கோவில் பகுதிகளை சுற்றி பல எண்ணை கிணறுகள் அமைக்கப்படுவதால் அதன் தொன்மையும் அதன் இயற்கை மரபும் மாறிவிடுகிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
இடும்பாவனம் பகுதியை சுற்றி பல கிணறுகள் அமைக்கப்படும் சூழல் தென்படுவதாகவும் இதுபோன்று கிணறுகள் அமைக்கப்படுவதற்கு முன் மக்களை ஏன் அந்த நிறுவனம் கருத்து கேட்கவில்லை என ஆதங்க படுகிறார் அப்பகுதி குமார் .
நெடுவாசல் கதிரமங்களம், பக்கத்து ஊர் கரையங்க்காடு தொண்டியக்காடு பகுதிகளில் மக்கள் தங்கள் எதிர்ப்பை அனுதினம் தெரிவித்து வரும் நிலையில். இடும்பாவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விளாங்காட்டில் நிலங்களை விவசாயிகள் தாரை வார்த்தது ஏன் ? என கண்ணீர்மல்க கேள்வி எழுப்பினார். சிலர் வாழ பலரை கெடுப்பது சரியா ?
இது கடந்து போன நிஜங்கள்
கஜா எனும் பேரிடரின் பின் அரசும், மீடியாக்களும் நடந்து கொண்டிருக்கும் விதம் உண்மைதனை உணர்த்தவில்லையா?

அரசும் மீடியாவும் விளை நிலங்களையும், வளங்களையும் அழிக்க துணை செல்கின்றதா?
இயற்கையின் பேரிடரையும் தமக்கு சாதகமாக்கி கொண்ட அரசின் சூழ்ச்சி தனை புரிந்து கொள்ளாமல் எதிர்காலத்தில் இன்னொரு சோமாலியாவாக , சூடானாக தமிழ் நாட்டை அலங்கோலமாக்கும் திட்டமிடல்களை நீங்கள் புரிந்து கொள்ள சோமாலியா,சூடான் நாடுகளின் வரலாறுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேற்குலக நாடுகளின் பேராசைக்கு பலியான ஆபிரிக்க நாடுகளின் வரிசையில் தமிழ் நாடும் சேரராமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என சிந்தியுங்கள்.
தகவல்  நிஷாந்தன் 


வேதாரண்யம்,கோடியக்கரை பறவைகள் சரணாலய தோற்றம்.கஜா புயலுக்கு முன்னும் பின்னும்...இராமர் பாதம் .



புகைப்படம் நன்றி  Seen Mani

1 கருத்து:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!