16 அக்டோபர் 2020

France & Uk அவசரகால நிலை பிரகடனம்!

 France 🇫🇷 

UK ( லண்டன் ) 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

கொரோனாவைரஸ் பரம்பலின் இரண்டாவது அலை தீவிரமாவதை தொடர்ந்து  அவசரகால நிலை பிரகடனம்!

🔹 France 🇫🇷  சனிக்கிழமை (17.10.2020) இரவு 9மணி முதல் காலை 6 மணிவரை Paris , Rouen, Lille, St Etienne, Lyon, Grenoble, Montpellier, Marseille and Toulouse. பெரு நகரங்களில் கொரோனா வைரஸ் பரம்பலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும்  இலக்குடன் ஊரடங்கு அமுல் ! 

🔹Lieferung  கூரியர் செய்யும்உணவகங்கள் 

தவிர்ந்த ஏனைய உணவகங்கள்,  கடைகள் அனைத்தும்  இரவு 9 மணிக்கு மூடப்பட வேண்டும். மக்களது நடமாட்டங்கள் பொலீஸாரால் கண்காணிக்கப்படும். ஊரடங்கை  மீறினால் குறைந்தது 135 ஈரோக்கள் அபராதம் அறவிடப்படும் !

🔹 ஊரடங்கு சமயத்தில் அவசர தேவைகளுக்கு  நடமாடுவதற்கான அனுமதிப்பத்திரம் பெற வேண்டும்.இரவுப்பணி செய்வோர் தொழில் நிமித்தம் ஊரடங்கு நேரத்தில் நடமாட வேலைத்தள அடையாள அட்டையுடன் உள் துறை அமைச்சின் அனுமதிப்பத்திரமும் வைத்திருக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து வழமை போன்று நடைபெறும்.

🔹 அனைத்து களியாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது.

14.10.2020

14 அக்டோபர் 2020

COVID 19 இரண்டாம் அலை..!

 COVID 19 முதல் அலை 

நவம்பரில் சீனா, பெப்ரவரி இத்தாலி உலகளவில் மார்ச் மாதம் Lock down  ஆரம்பித்தது.

இரண்டாம் அலை COVID 20  செப்டம்பரில் ஆரம்பித்து முன்னரை விட மும்மடங்கு வேகமாக பரவுகின்றது. ஐரோப்பா நாடுகள் கனடா, அமெரிக்க எங்கும் மீண்டும் ஊரடங்கு நிலை பகுதி பகுதியாக அமுல் படுத்துகின்றார்கள். 

 எனினும் முதல் அலை, இரண்டாம் அலை இரண்டுக்கும் இடையிலான பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள்  அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும்மாறுபட்டிருக்கின்றன

COVID 19 முதல் அலையில் நோயை பரவ விட்டு நோயாளிகளை தனிமைப்படுத்தி நோய் தீவிரமடைந்த பின் நூறு, ஆயிரம் நபர்கள் என்றளவில் Corona Virus test செய்து மருத்துவம் செய்தார்கள். அதனால் இறப்பு வீதமும் அதிகமானது. 

COVID 20  இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு  சோதனைகள்  அதிகரித்துள்ளார்கள்.   இலட்சக்கணக்கானோருக்கு தினமும் ஆரம்ப நிலைகளிலேயே  Test செய்ய பட்டு positiv வருமானால் அந்த நபர் சார்ந்து பழகியோருக்கு அறிகுறி இல்லாமலே test  செய்து விடுகின்றார்கள். அதனால் அனாவசிய தனிமைப்படுத்தல்கள், பயங்கள் தவிர்க்க படுகின்றன. 

உதாரணமாக இப்போது இருமல், தடிமன், காய்ச்சல், தொண்டை வறட்சி, நோ, சுவாசத்தில் வாசனை இல்லை, நாக்கில் சுவை மரப்பு ( இந்த அறிகுறிகள் Covid 19 க்கானது மட்டும் அல்ல )  உங்களுக்கும் கொரோனா  வைரஸ் தொற்று இருக்குமோ என்று ஐயம் இருந்தால் உடனே உங்கள் குடும்ப மருத்துவருக்கு தொடர்பு கொண்டு corona வைரஸ் test செய்ய வேண்டும் என்று கேட்கலாம். இதன் மூலம் நோயானது ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டு  கையாளப்படுகின்றது. நோயாளர்களை தனிமைப்படுத்தும் நாள்களும் குறைக்கப்பட்டிருக்கின்றன,

இப்போது நோய் பரவும் வேகத்துக்கு  இழப்புகள் குறைவாக இருப்பதாக ஊடகங்களில் வெளியிடுகின்றார்கள். ஆனாலும் நிலைமையின் தீவிரம் அடுத்தடுத்த மாதங்களில் தான் உணர முடியும். .

✳️ இலங்கையில் சுகாதார துறை முதல் அலையை உலகளவில் சிறப்பாக கையாண்டு  குறைந்த இழப்புகளுடன் கடந்திருந்தது. 

இரண்டாம்  அலையை கையாள்வதில் சற்று பதட்டம்  அடைவதாக தோன்றுகின்றது. எனக்கு இப்படி தோன்றுகின்றதா..? அல்லது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறித்த போதிய தெளிவு இன்மையால் பதறுகின்றார்களா..? 

அப்படியே அவரவர் நாட்டு சூழலையும் இங்கே எழுதினால் கடந்த முறை போல் எமது மருத்துவ நண்பர்களுக்கும், சுகாதார துறை பணியாளர்களும்கும் பயன் படும். 

Covid 19 இரண்டாம் அலை

இதையும் கடந்து வருவோம்

COViD 19 பரவல் தடுப்பு தற்பாதுகாப்பு ஆலோசனைகள் எச்சரிக்கைகள்



இரண்டாம் தடவை. கொரோனா Virus ...!

 சுவிஸில்  ( 14.10.20)   

2,823  நபர்களுக்கு Covid 19  நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள். 

ஒரு முறை வந்து குணமானவர்களுக்கு இரண்டாம் முறை கொரோனா Virus உள்ளுறுப்புகளில் கடும்பாதிப்பை  உருவாக்குகின்றது..25 வயதான ஒருவர் குறுகிய காலத்திற்குள் இரண்டாவது முறையாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டார்.  அவருக்கு இரண்டாம் தடவை. வென்டிலேற்றார் தேவை பட்டது. 

அடிப்படையில், SARS Covid  -2 முதல் முறை நோய்த்தொற்றுக்குப் பிறகு  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  ( Immune response) குறைவாக இருப்பதால்  இரண்டாவது நோய்த்தொற்றின் போது உயிரணுக்களுக்கு வைரஸ் அணுகலை அனுமதிக்கக்கூடும் அதனால் இரண்டாவது நோய்த்தொற்று கடுமையாக பாதிப்புகளை

உருவாக்குகின்றது. ஒரே நபரினுள் முதல் முறை தொற்றிய வைரஸ் இரண்டாம் முறை மரபு மாறியும் இருந்தது. 

மேலும் விரிவாக இங்கே : 

Live Science

NPR Org 

படம் : வைரஸ்  நேரடி மற்றும் மறைமுக சேதத்தை ஏற்படுத்தும் உடல் உள் உறுப்புகள்




கொரோனா வந்தபின் வருந்துதல் பெருமடமை...!!

 சுவிஸ் . 

14.10.2020 

ஹோட்டலறி சார்ந்த துறைகள் வருமானம் இன்றி  மீண்டும்  வேலை வீதம் குறையும் வாய்ப்பு என்பதால் உணவு துறை நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு நவம்பரிலிருந்து  சம்பளம் குறையும். 

( ஆரம்பத்தில் இப்படி எழுதிய போது இங்கே அப்படி எல்லாம் நடக்காது என்றவர்கள்..  இப்போது தங்கள் சூழல் சரி இல்லை என்று பூசி மெழுகுவதை அவதானித்தேன் 😎) 

இவ்வருட கொரோனா வைரஸ் திடீர் lock down சமாளிக்க தொழில் நிறுவனங்களுக்கு  வங்கிகளில் வட்டி இல்லாத கடன் பரிந்துரைத்திருந்தார்கள்.

அந்த கடன்களை திரும்ப செலுத்த வருமானம் இல்லை என்றால் நிறுவனங்கள் காலாவதி ஆகி இழுத்து மூடி விட்டால் .... கடன் கொடுத்த வங்கிகள் நிலை..... அடுத்து வரும் வருடங்களில் வங்கிகள் அரசை நெருக்கும் வாய்ப்பும் உருவாகும். இனி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசுகள் திணறி வேறு வழி இன்றி MASK அணிந்து வாழும் அறிவித்தலோடு எல்லாவற்றையும் திறந்து விட்டிருக்கின்றார்கள். 

பள்ளி, கல்லூரிகள்.....? 

இந்த வாரம் சில நாள்கள் யுனிவசிட்டி சில பிரிவுகள் மீண்டும் ஒன்லைன் கிளாஸ்  அறிவித்து இருக்கின்றார்கள்.

ஆரம்பத்திலிருந்து சொல்வது தான் .. இனி வரும் சில வருடங்கள் புதிய திட்டங்கள், முதலீடுகளை தவிர்த்து பணத்தை சேமித்து உண்ணவும், உடுக்கவும், தங்கவும் போதுமென திட்டமிடுங்கள். வேறு எதுவும் வேண்டாம்... உயிர் பாதுகாப்புடன்  ஆரோக்கியமும் முக்கியம்..!

வருமுன் காப்பதே அறிவுடைமை....! 

கொரோனா வந்தபின் வருந்துதல் பெருமடமை...!!